வாசல்
மனம் நனைக்கும் சாரல்களாய் அவ்வபோது விழும் வரிகளை சேகரிப்பது குளிர் கால நெடுஞ்சாலை பயணத்தின் சாலையோர தேநீர் அனுபவமாய் இருக்கிறது. அவற்றை கவிதைகளாய் வகைபடுத்த இயலாவிட்டாலும், இன்றைய அலைபேசி யுகத்தின் பரிணாம மாற்றத்தில் அவை குறுங்கவிதைகளாய் உருப்பெறும் என நம்புகிறேன். அலைபேசியில் குறுந்தகவலாய் அனுப்புவதற்காகவே எழுதப்பட்டதால் இப்பெயர் பொருந்தும் என நம்புகிறேன். இனி அவ்வபோது வெளியாகும் குறுங்கவிதைகள் மீதான கருத்துப் பகிர்தலை எதிர்பார்க்கிறேன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home