Friday, July 1, 2011

பன்னீர்ப்பூக்களும் நானும்

புத்தகங்களை அணைத்தபடி
அந்த பன்னீர் மரத்தடியில்
நீ  பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த போது 
என் காதலை சொன்னேன்...
போவத்ற்கு முன் அவசரமாய் நீ வீசிய பார்வை
மொழிபெயற்க இயலாது
அங்கேயே உறைந்து விட்டது...
உன் அடுத்த வருகைக்காய் 
அங்கு உதிர்ந்து கிடக்கும்
பன்னீர்ப்பூக்களும் நானும்...

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home